UPCOMING EVENTS

ஷஃபாஅத்தை மறுக்கும் நயவஞ்சக கூட்டம்

ஷஃபாஅத்தை மறுக்கும் நயவஞ்சக கூட்டம் அன்று இருந்தது போல் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. அதுவும் தவ்ஹீத் – ஏகத்துவ ஜமாஅத் என்ற பெயரில்!

பாவத்தை மன்னிப்பவன் அல்லாஹ் தான், ஆனால் அல்லாஹ் சொல்கிறான், ‘ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, (ஹபீபே) உங்களிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீங்களும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள் என்று சூரா நிஸா 4:64ல் தெள்ளத்தெளிவாக வருகிறது. இதை விட தெளிவு வேண்டுமா?

ஆனால், இன்றைய போலி தவ்ஹீதுவாதிகள் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பார்களாம்! அல்லாஹ் சொல்கிறான், ரூஹு (எனும் ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில்  அந்த ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் என்று சூரா நபா 78:38 தெளிவாக சொல்லும் போது இந்த அறிவிலிகள் சொல்வது நகைப்புக்குரியது, மேலும் இவர்களின் இந்த பேச்சு அகம்பாவத்தை நிலைநிறுத்தும் பேச்சாகவே உள்ளது.

திரைகள் அகற்றப்பட்டு இருக்கும் நாள் மறுமையாகும், அந்த நாளிலேயே அல்லாஹ்விடம் நேரடியாக பேசமுடியாது என்று இருக்கும் போது, திரைகளடங்கிய இவ்வுலகில் இந்த குருடர்களுக்கு என்ன தெரியும்? சிந்திக்க வேண்டும் இஸ்லாத்தை விளங்க துடிக்கும் மக்களே.

அன்றைய காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகரிடத்தில். அல்லாஹ்வின் ரஸூலிடம் வாருங்கள், அந்த ரஸூல் உங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பார்கள் என்று சொன்னால் என்ன சொல்வார்கள் தெரியுமா?

“வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள் என்று ( நயவஞ்சகர்களான) இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை (ஹபீபே!) நீங்கள் காண்பீர்கள். சூரா முனாஃபிக் 63:5

எவ்வளவு தெளிவாக சொல்கிறது! இன்னும் தஃப்ஸீரில், இந்த முனாஃபிக்குகளை ரஸூலிடம் வாருங்கள் என்று அழைக்கும் போது  சொல்வார்களாம், ‘இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம், எங்களை அந்த நபியை வணங்க சொல்கிறீர்களே!’ என்று கேட்பார்களாம். சுப்ஹானல்லாஹ்! அதே வார்த்தையை இன்றும் உபயோகிக்கிறார்கள் இன்றைய நயவஞ்சகர்கள். ஆக ஷஃபாஅத் வேண்டாம் – தேவையில்லை, அது இணைவைப்பு என்று சொல்பவன் சந்தேகமின்றி முனாஃபிக் – நயவஞ்சகன் தான் என்பதில் சந்தேகமில்லை.

வல்ல நாயனாகிய அல்லாஹ் தஆலா, அந்த நயவஞ்சக கூட்டத்தின் தலைவர்களது சதிகளை இஸ்லாமிய மக்களுக்கும் இன்ன பிற சகோதர மதத்தினருக்கும் தெளிவுபடுத்தி இஸ்லாத்தை உள்ளாஉள்ளபடி அறிந்து வணங்கிய ஆத்மீக ஞானிகளாகிய வலிமார்களுடன் எம்மையும் சேர்த்தருள்வானாக ஆமீன்!

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts